Thursday, June 12, 2008

காதல் என்றால் என்ன ?


இந்த கேள்வியை எனக்கு நானே பல நாட்களாக கேட்டு வருகிறேன் . ஏனெனில் நான் நன்றாக தூங்கி பல நாட்களாயிற்று . இதற்கு முன் பல நண்பர்களிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளேன் அது என்னடா ? தூக்கம் வருது தூங்க முடியல , பசிக்குது சாப்பிட முடியல , அப்படிங்கறிங்க ? ஆனால் இந்த பாழாய்ப்போன காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை . கண்ணை மூடினால் அவள் ஞாபகம் , அப்படியே கண்ணிலும் , நெஞ்சிலும் உறுத்துகிறாள் . எந்த செயலைச் செய்தாலும் அவள் ஞாபகமே வருகிறது . இத்தனைக்கும் அவளும் நானும் அதிகம் பேசியதில்லை . ஆனால் இதன் காரணம் எனக்குத் தெரியும் . ஆம் ! அதுதான் அவளது விழிகள் . அது என்ன விழிகளா இல்லை ! இல்லை ! விஷம் தடவிய வேல் , கயல்விழி அந்த பார்வையின் வீச்சை என்னால் தாங்க முடியவில்லை . ஒரே பார்வையில் என்னை நாக் - அவுட் செய்து விடுகிறாள் . அந்த பார்வை சொல்லும் சங்கதிகள் தன் எத்தனை ? எத்தனை ? தயவு செய்து என் நலம் விரும்பிகள் யாராவது இதற்கு ஒரு தீர்வு சொன்னால் அடியேன் நன்றி உடையேனாய் இருப்பேன் .

1 comment:

sivashankar said...

தம்பி நீ என்ன சாதரண ஆளா. நீ யார். உன்னை பார். ஏண்டா காலையில் எழுந்தோமா காலேசுக்கு வந்தோமா இங்க நாலு பேர திட்டிநோமா இல்லாம உனக்கு லவ்வு கேக்குதோ. பாவம்டா அந்த புள்ள. நீ சைட் அடிக்க வந்த வயசுல அது ஜட்டிகுட போட தெரிஞ்சு இருக்காது இது உனக்கே பாவம்னு தெரியலையா ஏன்டா பணங்களா உனக்கட லவ்வுன தெரியாது